5:28 AM
0



முந்தல் பொலிஸ் பிரிவின் மககும்புக்கடவல பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 47 வயதான ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முந்தல் பொலிஸார்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

Powered by Blogger.